அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இபிஎஸ்!
அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடபாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
''பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், சகோதரர் அண்னாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் அண்ணாமலை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை தலைவராக நியமித்தது. நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, மாநில பாஜகவின் உள்கட்சி பூசல்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை செயலாளர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மேலிடத்தில் அழைப்பின்பேரில் நயினார் நாகேந்திரனும் தில்லுக்குச் சென்றுள்ளார்.