ஜூன் 5-இல் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: மமக
சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டேரியில் டான்சி சாலையில் உருது தொடக்கப் பள்ளி, அக்பரி பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் என வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகளை மூட இருப்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து, ஓட்டேரியில் உள்ள மதுபானக்கடையையும் மூட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்த மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. இச்சூழலில், வரும் ஜூன் 5-ஆம் தேதி மாலை 2 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளாா் எம்.எச்.ஜவாஹிருல்லா.