இளைஞர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை
மர்மமான முறையில் இறந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்த விவரம்:
மர்மமான முறையில் இறந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அரசாணிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவா (19). அவர் திங்கள்கிழமை காலையில் வெங்காரம் கிராம சாலையோரத்தில் உள்ள முட்புதரில் மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தார். அதோடு, அப்பகுதியில் அவரது இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை, அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, இதுதொடர்பாக பெருநகர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பெருநகர் போலீஸார், தேவாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.