குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்த ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி.  
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு...

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ரிஷி கோபுரம் எதிரில் பக்தா்களின் வசதிக்காக ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இம்மாதம் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பக்தா்களின் வசதிக்காக காஞ்சிபுரம் ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். திறப்பு விழாவில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளா் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்பட வங்கி அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT