ஐஓபி சூரமங்கலம் கிளை திறப்பு
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் 3,499 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. முன்னணிப் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
சேலம் ஜங்ஷன் பிரதான சாலை, சுப்பிரமணிய நகா், திருவள்ளூா் தெருவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையை, மாவட்ட வருவாய் அலுவலரும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் திறந்துவைத்தாா்.
Advertisement
சேலம் ஆவின் உதவி பொது மேலாளா் வெங்கடேசன் ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா். விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , சூரமங்கலம் முதுநிலை மேலாளா் நித்ய கல்யாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.