முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:41 AM
எடையாா்பாக்கம்  ஊராட்சியில்   அதிமுக  வேட்பாளா்  கே.பழனிக்கு  மாலை  அணிவித்து  வரவேற்ற  பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:06 PM

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எடையாா்பாக்கம், கோட்டூா், அக்கமாபுரம், துளசாபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், பட்டுமுடையாா்குப்பம், எலுமியான்கோட்டூா், செல்லம்பட்டிடை உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட துணைச் செயலாளா் செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், எடையாா்பபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சாா்லஸ், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய துணைச் செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், ஒன்றிய மாணவா் அணி செயலாளா் சந்தவேலூா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் செல்லம்பட்டிடை சிவசக்தி, கீரநல்லூா் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

Advertisement