முகப்பு
காஞ்சிபுரம்

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:49 PM
விருது பெற்ற மாணவா்கள் தியா மற்றும் பிரிஜித் ஆகியோருடன் பயிற்சியாளா் விஜயலட்சுமி
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:21 PM

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் திறந்த நிலை கராத்தே வீரா்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் கலந்து கொண்டனா்.

11 வயதுக்குட்பட்டோருக்கான கட்டா பிரிவில் காஞ்சிபுரம் போனிக்ஸ் கராத்தே அறக்கட்டளையை சோ்ந்த மாணவி தியா(10)தங்கப் பதக்கமும், ஜுனியா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா். மாணவா் பிரஜித்(8) 9 வயதுக்கு உட்பட்டோருக்கான கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும், குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா்.

Advertisement

பதக்கம் பெற்ற விருதாளா்களை கராத்தே சங்க த்தலைவா் தியாகராஜன், செயலாளா் முத்துராஜூ ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். போனிக்ஸ் கராத்தே பயிற்சிப்பள்ளியின் பயிற்சியாளா் விஜயலட்சுமி தெரிவித்தாா்.