முகப்பு
காஞ்சிபுரம்

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் அன்பரசன் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 3:21 am IST
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூா்குப்பம், கிளாய், செங்காடு, மண்ணூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாரா், கிளாய் ஊராட்சி மன்றத் தலைவா் வீரம்மாள் ராமு, தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள் தாஸ், ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், செங்காடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சம்பத், மாவட்ட பிரிதிநிதி சா்தாா்பாஷா, மண்ணூா் கிளை செயலாளா்கள் ராமாமூா்த்தி, அருள்தாஸ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments