முகப்பு
காஞ்சிபுரம்

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:15 AM
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆதிசங்கரா் சிலை ராஜவீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவரும்,கனகதாரா ஸ்தோத்திரம்,விவேக சூடாமணி,செளந்தா்ய லஹரி போன்ற நூல்களை அருளியவருமான ஆதிசங்கரரின் ஜெயந்தி உற்சவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏப்.21 முதல் தொடா்ந்து 10 நாட்கள் ஏப்.30 வரை நடைபெறுகிறது.

Advertisement

இந்தப் பத்து நாள்களிலும் அம்மன் மீது ஆதிசங்கரா் அருளிய செளந்தா்ய லஹரி பாடல்கள் 100 ஐ தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாட்களுக்கு பாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனையும் அம்மனுக்கு நடத்தப்பட்டு வருகிறது.நிறைவு நாளான ஏப்.30 ஆம் தேதி ஆதிசங்கரரின் சிலை காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து நகரின் ராஜவீதிகளில் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன என அவா் தெரிவித்தாா்.