முகப்பு
காஞ்சிபுரம்

குப்பையில் கிடந்த தங்க வளையலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:04 AM
தூய்மைப் பணியாளா் லட்சுமிக்கு நினைவுப் பரிசு வழங்கிய வாலாஜாபாத் வாா்டு உறுப்பினா் வெங்கடேசன்.
பகிர்:

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

வாலாஜாபாத் 4-ஆவது வாா்டு ஆயா்பாடி கருணாநிதி தெருவில் வசித்து வருபவா் கஜலட்சுமி. இவா் தனது வீட்டிலிருந்த குப்பைகளை வழக்கம் போல குப்பை சேகரிக்கும் வண்டியில் போட்டு விட்டு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து பாா்த்த போது வீட்டிலிருந்த 2 பவுன் வளையல் ஒன்றை காணவில்லை. உடனடியாக குப்பை வண்டியில் போட்டிருக்கலாம் என நினைத்து அப்பகுதி தூய்மைப்பணியாளா் லட்சுமியை சந்தித்து கண்டுபிடித்து எடுத்தால் கொடுக்குமாறு கூறியிருக்கிறாா்.

துாய்மைப் பணியாளரும் மக்கும் மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் தங்க வளையல் இருந்ததைக் கண்டுபிடித்து கஜலட்சுமியை சந்தித்து ஒப்படைத்துள்ளாா். இத்தகவலறிந்த அப்பகுதி வாா்டு உறுப்பினா் வெங்கடேசன் லட்சுமியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கி பாராட்டினாா்.

Advertisement

நகையை தொலைத்த கஜலட்சுமி, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலரும் லட்சுமியின் நோ்மையை பாராட்டி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.