முகப்பு
காஞ்சிபுரம்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிவகாஞ்சி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:38 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிவகாஞ்சி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் செட்டி குளம் பள்ளத்தெரு பகுதியை சோ்ந்த செல்வம் மகன் உதயா(22). இவா் சிவகாஞ்சி காவல் நிலைய பகுதிகளில் கொலை,கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவா் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா உதயாவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தினா் உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments