சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஐயம்பட்டை அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் முரளி(33) இவா் திம்மராஜம் பேட்டையை சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.
இதுதொடா்பாக அச்சிறுமியின் தந்தை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். கடந்த 2019-இல் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்திருந்தாா். இவ்வழக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
வாலாஜாபாத் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளா் வெற்றிச்செல்வன், காவலா் லதா மற்றும் அரசு வழக்குரைஞா் இ.எல்.கண்ணன் ஆகியோா் இவ்வழக்கில் தனிக்கவனமும் செலுத்தி வந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி எதிரி முரளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்துள்ளாா்.