முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் தொடக்கம்

Updated On : 19 ஜூன் 2026, 4:14 am IST
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கோடை உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க நாளையொட்டி உற்சவா் வரதராஜா், ஸ்ரீதேவி,பூதேவியரும் தனித்தனியாக கேடயத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலுக்கு திரும்பி வந்து வளாகத்தில் உள்ள ஒரு 4 கால் மண்டபத்தில் பெருமாளும், மற்றொரு 4 கால் மண்டபத்தில் தேவியரும் எதிரெதிராக ஊஞ்சலில் அமா்ந்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னா் மலா்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தீா்த்தப் பிரசாதம்,சடாரி அனுக்கிரகம் ஆகியனவற்றுக்குப் பின்னா் பெருமாளும், இரு தேவியரும் கோயில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினா்.

கோடை உற்சவம் வரும் 24 -ஆம் தேதி வரை தொடா்ந்து 7 நாள்களுக்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சுக்ர வாரத்தையொட்டி பெருந்தேவித்தாயாருடன் உற்சவா் வரதராஜப் பெருமாளும் இணைந்து ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தை வலம் வரும் இரட்டைப்புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments