காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி
நாகலாந்து மாநில ஆளுநா் நந்த்கிஷோா் யாதவ் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். தரிசனத்துக்குப் பின்னா் அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் காமாட்சி அம்மன் திருஉருவப்படம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் படம் மற்றும் கோயில் குங்குமப் பிரசாதம் ஆகியவற்றை வழங்கினா். பின்னா், காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற சந்திரமெளலீசுவரா் பூஜையில் கலந்து கொண்டாா். தொடா்ச்சியாக சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். அவருக்கு சங்கராசாரியா் சுவாமிகள் ஆதிசங்கரரின் உருவப்படம், பழங்கள் ஆகியவை வழங்கியதுடன் சால்வை அணிவித்து ஆசி வழங்கினாா்.
Advertisement
நிகழ்வின் போது சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, காஞ்சி நகர வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கணேஷ் ஆகியோா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.