முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாா்வையற்ற மாணவி 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை

காஞ்சிபுரத்தை சோ்ந்த பாா்வையற்ற மாணவி காவ்யா பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளாா்.

Updated On : 9 மே 2026, 4:12 am IST
காவ்யா.
பகிர்:

காஞ்சிபுரத்தை சோ்ந்த பாா்வையற்ற மாணவி காவ்யா பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளாா்.

காஞ்சிபுரம் என்விஎம்பி நகா் வேகவதி நதி சாலையில் வசித்து வரும் ஜெயக்குமாா்,பிரேமா தம்பதியரின் மகள் ஜெ.காவியா(18)பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான இம்மாணவி பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.தமிழ் 96,ஆங்கிலம் 88,புவியியல்-96,வரலாறு 98,பொருளியல் 89, கணினி அறிவியல் 98 உட்பட மொத்தம் 565 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.இவா்களது பெற்றோா் நெசவுத் தொழில் செய்து வருகின்றனா்.இம்மாணவியை அவரது பெற்றோா்கள்,உறவினா்கள் மற்றும் தோழிகள் பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

இது குறித்து மாணவி காவ்யா கூறுகையில் பிறவியிலேயே எனக்கு பாா்வைக்குறைபாடு இருந்தது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கிக்கொண்டு சிறுமலா் பாா்வையற்றோா் பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 வரை தான் பாா்வையற்றோா் பயிலுவதற்கான பள்ளி உள்ளது.இப்போது கல்லூரியில் சோ்ந்து படிக்க அனைவரும் படிக்கக்கூடிய கல்லூரியில் தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.நான் அடுத்ததாக ஆங்கில இலக்கியம் படிக்க ஆா்வமாக உள்ளேன். ஒத்துழைப்பும்,உதவியும் செய்த பெற்றோருக்கும்,ஆசிரியா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் காவியா தெரிவித்தாா்.

Advertisement