பாரம்பரிய அரிசி, விதை திருவிழா ஆற்காட்டில் இன்று தொடக்கம்
தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய ஆற்காடு அரிசி, விதைத்திருவிழா சனிக்கிழமை தொடங்கி இரண்டுநாள்கள் நடைபெறுகிறது.
தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய ஆற்காடு அரிசி, விதைத்திருவிழா சனிக்கிழமை தொடங்கி இரண்டுநாள்கள் நடைபெறுகிறது.
இதில் பாரம்பரிய விதைநெல், அரிசி வகைகளின் சந்தை, கிராமிய திருவிழா, கால் நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளின் கண்காட்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவில் வேலூா் நருவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத், உயிராற்றல் மேலாண்மைப் பயிற்சி மைய பயிற்றுநா் நவநீதகிருஷ்ணன், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளா் வி.பி சிவக்கொழுந்து, விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி. செல்வம், சித்த மருத்துவா் கு.சிவராமன், மாநில திட்டக் குழு உறுப்பினா்கள் சுல்தான் அஹமது இஸ்மாயில், எஸ். பிரிட்டோராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசுகின்றனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் விமல் நந்தகுமாா், கே.எம். பாலு, ஏ.எம். உதயசங்கா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.