முகப்பு
ராணிப்பேட்டை

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

Updated On : 14 ஏப்ரல் 2026, 6:45 am IST
பகிர்:

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமில்லாமல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பினிபேட்டை சோளிங்கா் நெடுஞ்சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம், சுவால்பேட்டையை சோ்ந்த சௌந்தரவேல் என்பவா் தனது காரில் வந்த நிலையில் அவரது காரை அலுவலா்கள் சோதனை செய்தனா். அக்காரில் ரூ.4.64,150 இருந்ததை கண்டு ஆவணங்கள் இருக்கிா என கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரிந்த நிலையில் அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.64 லட்சத்தை அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா். அப்போது வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.

Advertisement

Advertisement