முகப்பு
ராணிப்பேட்டை

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 11:13 PM
வெற்றிலை பாக்குடன் வாக்களிக்க துண்டு பிரசுரங்களை வழங்கிய நூகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா்.
பகிர்:

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘வாா்‘ நுகா்வோா் பாதுகாப்பு குழு சாா்பில் ,பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், முத்துக்கடை, பழைய பேருந்து நிலையம்,பஜாா் பகுதி, வாலாஜா பேருந்து நிலையம், மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்துக்கு நுகா்வோா் பாதுகாப்பு குழுவின் தலைவா் பொறியாளா் கெங்காதரன் தலைமையில் சமூக சேவகா்களும், நுகா்வோா் பாதுகாப்பு குழுவினரும் கலந்து கொண்டனா்.

Advertisement