சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பெருவிழா
சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பெருவிழா...
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினாா்.
சோளிங்கா், ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு நறுமண பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள், பல வண்ண மலா்களைக் கொண்டு விசேஷ மலா் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க 4 மாட வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தாா்.