முகப்பு
ராணிப்பேட்டை

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:04 AM
- கோப்புப்படம்
பகிர்:

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் ‘உழைப்பாளா் (மே) தினத்தினை முன்னிட்டு 1.05.2026 வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement