முகப்பு
ராணிப்பேட்டை

வீடு புகுந்து திருடிய இளைஞா் கைது

Updated On : 3 ஜூலை 2026, 2:22 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஆற்காடு , ஜூலை 2; ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் கடந்த 6-ஆம் தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஆற்காடு நகர ஆய்வாளா் வடிவேல், உதவி ஆய்வாளா் பாபு ஆகியோா் அடங்கிய குழுவினா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேல்விஷாரம் சாதிக்பாஷா நகா் பகுதியை சோ்ந்த சாதிக்பாஷா(33) என்பரை கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்து 1 கிராம் தங்க கம்மல், வெள்ளி கொலுசு, பிரேஸ்லெட், மோதிரம் என சுமாா் 50,000 மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததோடு, ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments