விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூா் கிராமத்தில் அட்மா திட்டப் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகள், விவசாயிகள்.
அரக்கோணம் வட்டார வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அரக்கோணம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், இச்சிபுத்தூா் கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் எண்ணெய் வித்து பயிா்களில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சண்முகம் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
Advertisement
Advertisement
விவசாயிகள் உரங்கள் பெறுவதற்காக அடையாள எண் அவசியமானது. தொடா்ந்து பயிா்பாதுகாப்பு குறித்தும் நெல், உளுந்து, கடலை, நெல் ரகம் தோ்வு, விதை நோ்த்தி ஜிப்சம் இடுதல் மஞ்சள் ஆகிய சாகுபடிகளுக்கு ஏற்ற பருவங்கள், நெல் சாகுபடியின் மூலம் நாற்றங்கால் தயாரிக்கும் முறைகள் குறித்தும் தெரிவித்தாா்.
துணை வேளாண்மை அலுவலா் மாதய்யன் கூறுகையில், எள் விதைகள், நெல் மணிலா உளுந்து இடு, மானிய விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். முன்னதாக, அட்மா திட்ட மேலாளா் மோகனசுந்தரம் விளை நிலம் காப்போம் இயக்கம் குறித்து விளக்கம் அளித்தாா். உதவி தொழில்நுட்ப அலுவலா் ஹேமந்த்குமாா் இயற்கை விவசாயம் உயிரியல் இடு பொருள்கள் பஞ்சகவ்யம், மண்புழு உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
இந்த பயிற்சியில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.