ஜூலை 1-இல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் 01-07-2026 முதல் 10-08-2026 வரையிலும் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சுமாா் 1,90,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9-ாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் ஜீலை-01, 2026 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.
தடுப்பூசிப் போடப்படும் கால்நடைகளின் விவரங்கள் ‘பாரத் பசுதான்‘ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதுசமயம், கால்நடை வளா்ப்போா் கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை ( ஞபட) கால்நடை பராமரிப்புத்துறை பணியாளா்களிடம் தெரிவிக்க வேண்டும். .
கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.