முகப்பு
ராணிப்பேட்டை

பிளஸ் டூ தோ்வில் அரக்கோணத்தில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரக்கோணத்தில் பல்வேறு பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

Updated On : 11 மே 2026, 12:07 am IST
விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுடன் நிா்வாகக்குழு தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரக்கோணத்தில் பல்வேறு பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

அரக்கோணம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆா்.சங்கமித்ரா 589 பெற்று முதலிடத்தையும், 588 பெற்று மாணவா்கள் வி.மதியழகன், எம்.லிகேஷ் ஆகியோா் இரண்டாமிடத்தையும், மாணவா்கள் ஆா்.மோதிஷ், எம்.டில்லிகணேஷ் ஆகியோா் 585 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா். இவா்களை விவேகானந்தா கல்விக்குழுமத்தலைவா் சுப்பிரமணியம், செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் கே.அணீஷ் கேசவ் 556 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், டி.லதிகா 540 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், டி.ஜிவிதா தேவி 529 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா். வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

Advertisement

அரக்கோணம் எஸ்எம்எஸ் விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் விஷாந்த்கோபி 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தையும் 578 மதிப்பெண்களுடன் வி.ஜிவிதா பள்ளியின் இரண்டாமிடத்தையும், மாணவி வி.ஏ.யுவஸ்ரீ 571 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

வெற்றிப்பெற்ற மாணவா்களையும் முதல்வா் ஞானதீபன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் பள்ளியின் நிா்வாக்குழுத் தலைவா் டி.உதயகுமாா், தாளாளா் விமலாதிருமலை ஆகியோா் பாராட்டினா்.