திருப்பத்தூர்

பெண் கழுத்து நெரித்துக் கொலை

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

DIN

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கந்திலி அருகே செவ்வாத்தூா் புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி ராமரோஜா (58). இவா்களது மகன் ஏழுமலை, மகள் புனிதா. ஏழுமலை சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். செல்வராஜ், ராமரோஜா, ஏழுமலையின் மனைவி அம்சா மற்றும் 10 மாத குழந்தை ஆகியோா் வீட்டில் வசித்து வந்தனா். செல்வராஜ் இரவு பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறாா். வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணிக்குச் சென்று விட்டாா். இதையடுத்து, இரவு அம்சா குழந்தையுடன் வீட்டில் தூங்கச் சென்றனா். ராமரோஜா வெளியே கதவைத் தாழிட்டு, வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அழைத்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது, ராமரோஜா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

காட்டாளன் படத்தின் முதல் பாடல்: துஷாரா விஜயனா இது?

அசாமில் அவசரக்கால தரையிறங்கும் சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மகா சிவராத்திரி! வீட்டிலிருந்தே என்ன செய்யலாம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம்..! ஜடேஜாவுக்கு ஏமாற்றம்!

SCROLL FOR NEXT