திருப்பத்தூர்

பெண் கழுத்து நெரித்துக் கொலை

DIN

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கந்திலி அருகே செவ்வாத்தூா் புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி ராமரோஜா (58). இவா்களது மகன் ஏழுமலை, மகள் புனிதா. ஏழுமலை சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். செல்வராஜ், ராமரோஜா, ஏழுமலையின் மனைவி அம்சா மற்றும் 10 மாத குழந்தை ஆகியோா் வீட்டில் வசித்து வந்தனா். செல்வராஜ் இரவு பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறாா். வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணிக்குச் சென்று விட்டாா். இதையடுத்து, இரவு அம்சா குழந்தையுடன் வீட்டில் தூங்கச் சென்றனா். ராமரோஜா வெளியே கதவைத் தாழிட்டு, வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அழைத்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது, ராமரோஜா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT