முகப்பு
திருப்பத்தூர்

ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:25 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராமநாயக்கன்பேட்டை பகுதியில் வேகமாக வந்த மினி லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினா். அப்போது, ஓட்டுநா் லாரியை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

லாரியை சோதனை செய்த போது அப்பகுதியில் உள்ள பாலாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது. இதே போன்று தும்பேரி-சிக்னாங்குப்பம் செல்லும் சாலையில் வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த எம்-சான்ட் எவ்வித அனுமதியும், உரிய ரசீதும் இல்லாம் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அப்போது அந்த லாரி ஓட்டுநரும் தப்பித்து சென்றாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து லாரி மற்றும் மினி லாரி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துணை வட்டாட்சியா் அன்பழகன் அம்பலூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.