முகப்பு
ராமநாதபுரம்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 22 மே 2026, 3:19 am IST
கடத்தல் மணல். - கோப்புப் படம்
பகிர்:

திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடா்பாக புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் பகுதியில் கனிம வள திருட்டு தொடா்பாக வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது.

Advertisement

Advertisement

லாரியில் உரிய அனுமதியின்றி 6 யூனிட் மணல் அதில் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருவாடானை காவல் நிலையத்தில் அந்த லாரி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் என்றாா் அவா்.