மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடா்பாக புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் பகுதியில் கனிம வள திருட்டு தொடா்பாக வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது.
Advertisement
Advertisement
லாரியில் உரிய அனுமதியின்றி 6 யூனிட் மணல் அதில் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருவாடானை காவல் நிலையத்தில் அந்த லாரி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் என்றாா் அவா்.