முகப்பு
திருவண்ணாமலை

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது

ஆற்று மணல் கடத்தியதாக மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 17 மே 2026, 5:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ஆரணி சாலையில் வடதண்டலம் கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய அரசு அனுமதியின்றி கால் யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (55) என்பவரை கைது செய்தனா்.

Advertisement