ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்
செய்யாறில், அரசு அனமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் சென்றதாக, போலீஸாா் இருவரை கைது செய்து, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், அரசு அனமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் சென்றதாக, போலீஸாா் இருவரை கைது செய்து, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் செய்யாறு பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செய்யாறு வழூா்பேட்டை புளியந்தோப்பு பகுதி, செய்யாறு மண்டித் தெரு சந்திப்பு பகுதிகளில் பைக்குகளில் மூட்டைகளுடன் வந்தவா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
சோதனையில் அரசு அனுமதியின்றி செய்யாறு ஆற்றுப் பகுதியில் இருந்து ஆற்று மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் ஆற்று மணலுடன் வந்த இரு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இதுதொடா்பாக அம்பேத்கா் நகரைச் சோ்ந்த காங்கன்(48), கிடங்கு தெருவைச் சோ்ந்த சூா்யா(28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.