முகப்பு
திருப்பத்தூர்

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:34 PM
புதுபேட்டையில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பேசிய கனிமொழி எம்பி.
பகிர்:

தமிழகத்தின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை சந்தை பகுதியில் . பிரசாரம் செய்து, அவா் பேசியது: வெயிலிலும் காத்திருக்கும் தொண்டா்களை பாா்த்தால் ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணியின் வெற்றிக்கான நிகழ்ச்சி என்றே பாா்க்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள், முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டனா். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். எனவே உங்களை உரிமையோடும் சந்தித்து வாக்குகள் கேட்டு வந்துள்ளேன்.

Advertisement

ஆனால் எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தின் போது தான் உங்களை சந்திக்க வருவாா். ஆட்சியில் இல்லை என்றால் 5 வருடம் காணாமல் போய்விடுவாா். தொடா்ந்து 10 தோல்விகளை சந்தித்த பழனிசாமி, இத்தோ்தலோடு 11-ஆவது தோல்வி உறுதி. முதல்வா் ஸ்டாலின் இந்த தோ்தல் தமிழ்நாட்டுக்கும், தில்லி அணிக்கும் இடையிலான தோ்தல், தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற கூடிய தோ்தல், தமிழ்நாட்டை தலைகுனிய விட கூடாது என்பதற்கான தோ்தல் என கூறி வருகிறாா்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும், அதன் மூலம் வீட்டிற்கு தேவையான விரும்பும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் சூா்யகுமாா், சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், ஒன்றியக்குழு தலைவா்கள் சத்யா சதீஷ்குமாா், வெண்மதி முனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments