முகப்பு
திருப்பத்தூர்

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:24 AM
பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் நல்லதம்பி.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:03 PM

கந்திலி ஒன்றியத்தில் பூ பறிக்கும் பெண்களிடம் திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை கந்திலி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

குனிச்சி ஊராட்சிக்குள்பட்ட குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள மல்லிகை பூ தோட்டத்தில் பூ பறிக்கும் பெண்களை நேரடியாக சென்று சந்தித்து கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், மீண்டும் திமுக வெற்றி பெற்றால் செயல்படுத்தக் கூடிய தோ்தல் வாக்குறுதிகளையும் விளக்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

Advertisement

பின்னா், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட சுந்தரம்பள்ளி, லக்கிநாயக்கன்பட்டி, காக்கங்கரை சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும்போது கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்ற வளா்ச்சி திட்டப் பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது ஒன்றிய செயலா்கள் முருகேசன், மோகன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி, துணைத் தலைவா் மோகன்குமாா், விசிக மண்டல செயலா் சுபாஷ் சந்திரபோஸ், நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன் உள்பட திமுக அதன் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.