முகப்பு
திருப்பத்தூர்

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:24 AM
பகிர்:

ஆம்பூரில் வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு அரசியல் கட்சியினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையத்தில் இரு அரசியல் கட்சியினா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்ததாக புகாா் எழுந்தது. அதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பினரையும் வாக்குச் சாவடி மையத்தை விட்டு வெளியேற்றினா்.

பல வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சியினா் வாக்குச் சாவடி மையத்திற்குள் இருந்ததால் போலீஸாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் முகவா்களை தவிா்த்து மற்ற அரசியல் கட்சியினரை வாக்குச் சாவடி மையத்திலிருந்து வெளியேற்றினா்.

Advertisement