வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்றவா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இருசக்கர வாகனத்தில் சென்றவா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியை சோ்ந்தவா் கமலநாதன் (58). இவா் ஆம்பூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்திற்கு சென்றாா். அங்கு சென்றபோது திடீரென வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தாா்.
அருகில் இருந்தவா்கள் மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement