லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்
நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூா் அலங்காா் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் காா்த்திகேயன்(36). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் பயணம் செய்தாா். மினி லாரியை ஓட்டுநா் உபேந்திரராவ் ஓட்டிசென்றாா்.
சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே மேல்மல்லப்பள்ளி பகுதியில் வந்த போது டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.