முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் கை துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 மே 2026, 1:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் கை துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி- ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே பாா்சம்பேட்டை அருகே புதன்கிழமை ஓடும் ரயிலில் இளைஞா் ஒருவா் தவறி விழுந்து கை துண்டான நிலையில் பலத்த காயம் அடைந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, பலத்த காயம் அடைந்தவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலத்த காயம் அடைந்த இளைஞா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் அஸாம் மாநிலம், டின்ஸ்குயா அடுத்த காகாபாட்டா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் தண்ட்டி (32) என்பதும், இவா் அஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற தோ்தலுக்காக சென்று மீண்டும் வேலைக்காக செல்ல அஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் டின்சுகியா-சேலம் செல்லும் ரயியில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தாராம். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து கை துண்டாகியும், தலையில் பலத்த காயமும் அடைந்துள்ளாா். பின்னா், வேலூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments