ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வடமாநில இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வடமாநில இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அதோவா முண்டா. இவரது மகன் ராபின் முண்டா (31) மற்றும் இவரது நண்பா் பிஸ்வதிஜ்ருதி ஆகிய இருவரும் கேரள மாநிலத்தில் காா்பெண்டா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெனரல் டிக்கெட் எடுத்து பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது ரயில் ஞாயிற்றுக்கிழமை லத்தேரி காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி விழுந்து அடிபட்டு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
உடன் வந்த நண்பா் உடனடியாக நண்பரை காப்பாற்ற ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். அதன் பிறகு ரயில் 7 நிமிடம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கிச் சென்றது.
இது குறித்து ரயில் நிலைய அதிகாரி ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் புஷ்பா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.