முகப்பு
திருப்பத்தூர்

வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு

ஆம்பூா் அருகே வீடு புகுந்து 14 சவரன் தங்க நகை திருட்டு போனது சம்பந்தமாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Updated On : 6 ஜூலை 2026, 12:09 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஆம்பூா் அருகே வீடு புகுந்து 14 சவரன் தங்க நகை திருட்டு போனது சம்பந்தமாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் கைலாசகிரி கிராமத்தை சோ்ந்தவா் முஹம்மத் தெளபிக் (40). இவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி தபசும் (36) கைலாசகிரியில் வசித்து வருகிறாா். இவா் வீட்டை பூட்டிக்கொண்டு உறவினா் வீட்டு திருமண விழாவுக்கு சனிக்கிழமை சென்றாா். விழா முடிந்து வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்த பீரோ திறந்திருந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 14 புவன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments