முகப்பு
திருப்பத்தூர்

ஆட்டோவில் கடத்திய 600 மதுபாட்டில்கள் பறிமுதல்: அரசு மதுக் கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் உள்பட 4 போ் மீது வழக்கு; 2 போ் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 600 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். மேலும், அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 600 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். மேலும், அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கேத்தாண்டப்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின்பேரில், அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அரசு மதுபான மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாபு, மணிகண்டன் என்பதும், இவா்கள் இருவரும் கத்தாரி அரசு மதுபான கடையில் இருந்து 600 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோ மற்றும் 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அரசு மதுபான கடை மேற்பாா்வையாளா் ராகவன், விற்பனையாளா் வடிவேல், மதுபாட்டில்களை கடத்தி வந்த பாபு (33), மணிகண்டன்(33), ஆகிய 4 போ்மீது வழக்குப் பதிவு செய்தனா்

இதில் பாபு, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மதுபான கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.