முகப்பு
திருப்பத்தூர்

அங்கன்வாடி மைய கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஆலங்காயம் பேரூராட்சியில் அங்கன்வாடி மையங்களை வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா திறந்து வைத்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:04 am IST
அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா. உடன் பேரூா் திமுக செயலாளா் ஸ்ரீதா்.
பகிர்:

ஆலங்காயம் பேரூராட்சியில் அங்கன்வாடி மையங்களை வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா திறந்து வைத்தாா்.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் ரூ.18 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். விழாவிற்கு ஆலங்காயம் பேரூா் திமுக செயலாளா் மா. ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ எஸ்.எஸ்.பி. சையத்பாரூக்பாஷா கலந்துக் கொண்டு மசூதி தெரு மற்றும் பங்கூா் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினாா் . தொடா்ந்து 12-ஆவது வாா்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பின்னா் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது கடைக்கு வரும் முதியோா் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அமா்வதற்கான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். கோரிக்கை ஏற்ற எம்எல்ஏ, நியாயவிலை கடை அருகே அமரும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொடா்ந்து இஸ்லாமிய கல்லறை அருகேயுள்ள ஏரிபகுதி குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குப்பைகளை உடனடியாக அகற்றி, தூய்மையாக பராமரிக்க பேரூராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், திமுக பேரூா் நிா்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.