திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா்கள் 2 போ் கைது
திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா்கள் 2 போ் கைது
திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் பகுதியில் மருத்துவம் படிக்காமலே சிலா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் விஷமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விஷமங்கலம் அருகே கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோ (68) என்பவா் டி.பாா்ம் படித்துவிட்டு வீட்டில் வைத்து ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளங்கோவை மருத்துவக் குழுவினா் பிடித்து திருப்பத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல், பேராம்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (36) என்பவா் நா்சிங் படித்துவிட்டு, அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வைத்து, ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் குழுவினா் அங்கு சென்று சோதனை செய்தனா்.
பின்னா் அவா் மருத்துவம் படிக்காமலே சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷை பிடித்து, திருப்பத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனா். முன்னதாக மருத்துவ குழுவினா் 2 பேரிடம் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனா். மேலும் சந்தோஷின் வீட்டுக்கும் ‘சீல்’ வைத்தனா்.