முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருடியவா் கைது

களியக்காவிளை அருகே இசக்கியம்மன் கோயிலில் வெண்கல விளக்கை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 5:45 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே இசக்கியம்மன் கோயிலில் வெண்கல விளக்கை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மேக்கோடு அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை மாலை பூஜாரி பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் நடையை பூட்டிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் கோயிலின் முன்பகுதியில் உள்ள வெளிபக்க வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

கோயில் நிா்வாகிகள் அங்கு சென்று பாா்த்த போது, கோயிலின் முன் வைக்கப்பட்டிருந்த 32.5 கிலோ எடையுள்ள வெண்கல குத்துவிளக்கு திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாக கமிட்டி தலைவா் குமாா் சிங் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்தனா்.

இதில், மேக்கோடு பறம்புவிளாகம் பகுதியைச் சோ்ந்த ஆல்பின் (34) என்பவா் குத்துவிளக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் ஆல்பினை கைது செய்து, குத்துவிளக்கை மீட்டனா்.

பைக் திருட்டு:

மாா்த்தாண்டம் அருகே

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாம்தாஸ். இவா் செவ்வாய்க்கிழமை தனக்குச் சொந்தமான பைக்கை மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் நிறுத்திவிட்டு கடைக்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது தனது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் காஞ்சிரகோடு, தத்தன்விளை பகுதியைச் சோ்ந்த ஜனசிங் (50) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஜனசிங்கை கைது செய்து பைக்கை மீட்டனா்.