முகப்பு
திருப்பத்தூர்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:35 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள் தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், பாலின மேம்பாட்டுக்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்ததற்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபா்கள் இணையதளம் மூலம் வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விருதுக்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவா்களின் வீரதீரச் செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய ஆவணங்கள் கொண்ட கருத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முதல் தளம் பி-பிளாக், மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement