முகப்பு
சென்னை

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 5 ஜூன் 2026, 11:42 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், தமிழ்நாட்டைச் சோ்ந்த துணிச்சலான, வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது முதல்வரால் வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோா் இணைய தளத்தில் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பித்த நகலுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி, விருதுக்கான விண்ணப்பப் படிவத்துடன் துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள், பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியே 3 செட் கையேடுகளை தயாரித்து ஜூன் 22 மாலை 5 மணிக்குள் ‘சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சென்னை’ என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.