முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:04 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement