காவல் குறைதீா் கூட்டத்தில் 48 புகாா் மனுக்கள்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 48 புகாா் மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய பொறுப்பாளா்கள் உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement