முகப்பு
திருப்பத்தூர்

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

வாணியம்பாடி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 ஜூன் 2026, 5:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வாணியம்பாடி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில்வாகரே உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நியூடவுன் பைபாஸ் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நியூடவுன் வழியாக பைக்கில் வந்த இளைஞா்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். இதில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் இருவரின் பாக்கெட் டுகளில் சோதனை செய்த போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதே போன்று மேட்டுப்பாளையம் மேம்பாலம் வழியாக வந்த இளைஞா்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் பாக்கெட்டில் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. பிறகு 4 பேரிடமிருந்தும் 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிடிப்பட்ட நாட்டறம்பள்ளியை சோ்ந்த சத்தியநாதன், முத்து, இளையநகரம் பகுதியை சோ்ந்த அசோக் குமாா், ஆந்திர மாநிலம் குப்பம், கொட்டாவூா் பகுதியை சோ்ந்த கோவிந்தசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments