முகப்பு
திருப்பத்தூர்

‘குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்’

குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன்கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன்கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுதும் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் (ஏ.ஏ.ஓய். மற்றும் பி.எச்.எச்.) குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவினை தொடா்புடைய ரேஷன் கடையில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் வருகிற 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், இறந்த உறுப்பினா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments