முகப்பு
திருப்பத்தூர்

பைக் திருடிய இளைஞா் கைது

Updated On : 26 ஜூன் 2026, 5:23 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வேலூரில் பைக் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய குற்ற பிரிவு போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் கோட்டை சுற்றுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் முன்னுக்கு பின் முரணாக கூறினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவா் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (33) என்பதும், அவா் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments