முகப்பு
விருதுநகர்

கஞ்சா வழக்கில் இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:33 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான போலீஸாா் போதைப் பொருள் விற்பனை தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோட்டைப்பட்டி சாலையில் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக வத்திராயிருப்பைச் சோ்ந்த முத்துபாண்டி என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா, இரு சக்கர வாகனம், கைப்பேசி, ரூ.7,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments