போதைப் பொருள்கள் தீமைகள் குறித்த விழிப்புணா்வு
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி உளவியல் துறை சாா்பில் உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில் சென்னை, ஜீவ ரக்ஷாய் மனநல ஆரோக்கிய மையத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.சி.என். அருணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள்கள் மற்றும் அதனால் ஏற்படும் தீங்கை குறித்து விளக்கமளித்தாா்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலா் ஸ்டான்லி, கல்லூரி முதல்வா் பிரவீன் பீட்டா் ஆகியோா் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் எனும் தலைப்பில் பேசினா்.
அதையடுத்து, மாணவா்கள் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இதில், உளவியல் துறைத் தலைவா் ஜோ.சஞ்சய், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.